முன்னணி 10 ஆசனங்களையாவது கைப்பற்ற வேண்டும்!

ஆசிரியர் - Admin
முன்னணி 10 ஆசனங்களையாவது கைப்பற்ற வேண்டும்!

தமிழருடைய ஆதரவோடு ஒற்றையாட்சி அரசியலமைப்பொன்று நிறைவேற்றப்பட்டதாக வரப்போகும் வரலாற்றுத் தவறைத் தடுக்க, வடகிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறைந்தது 10 ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் எனவும், அதுவே தமது இலக்கு எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று மாலை முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு