A - 9 வீதி - பரந்தனில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு, மற்றொரு இளைஞன் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
A - 9 வீதி - பரந்தனில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு, மற்றொரு இளைஞன் படுகாயம்..

கிளிநொச்சியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து நேற்றிரவு  8 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட பரந்தன் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு