மணல் கடத்தல் உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு! இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
மணல் கடத்தல் உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு! இருவர் கைது..

கிளிநொச்சி - இராமநாதபுரம், மாயனூர் பகுதியில் நேற்றுமுன்தினம் (21) சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது காவல்துறை துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளது. 

குறித்த உழவு இயந்திரத்தை மாயனூர் பகுதியில் கடமையிலிருந்த காவல்துறையினர் நிறுத்துமாறு சமிஞ்சை வழங்கியுள்ளனர். 

எனினும் குறித்த சமிஞ்சையை பொருட்படுத்தாது பயணித்த அந்த உழவு இயந்திரம் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, உழவு இயந்திரத்தின் சாரதி உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு