ஆனையிறவு இராணுவ சோதனைச்சாவடியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இளைஞன் உயிரிழப்பு !

ஆசிரியர் - Editor I
ஆனையிறவு இராணுவ சோதனைச்சாவடியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இளைஞன் உயிரிழப்பு !

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனையிறவு  சோதனைச் சாவடிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை  மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசுவமடு ரெட்பாரா பகுதியில் இருந்து இருவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது  வேக கட்டுப்பாட்டை இழந்து இராணுவத்தின் சோதனைச் சாவடியுடன் மோதி,  எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசுவமடு ரெட்பாரா பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் கலையரசன் என்னும்  21 வயது உடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

விபத்தில்  மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் , இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு