பளை - கச்சார்வெளி தான்தோன்றி பிள்ளையார் கோவிலில் 6 லட்சத்திற்கு ஏலம் போயுள்ள இரு மாம்பழங்கள்..

ஆசிரியர் - Editor I
பளை - கச்சார்வெளி தான்தோன்றி பிள்ளையார் கோவிலில் 6 லட்சத்திற்கு ஏலம் போயுள்ள இரு மாம்பழங்கள்..

பளை, கச்சார்வெளி தான்தோன்றி பிள்ளையார் கோவில் பூசைக்கு வைக்கப்பட்ட இரு மாம்பழங்கள் 6 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போயுள்ளது.

குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்றசவம் கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உற்சவங்கள் நடைபெற்று வரும் நிலையில் 5ஆம் திருவிழாவான மாம்பழத்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

வசந்தமண்டப பூசைகள் நிறைவுபெற்றதும் விநாயகப்பெருமானின் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழங்கள் இரண்டு ஏலத்தில் விடப்பட்டன.

பக்த்தர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 6 இலட்சம் வரை சென்றுள்ள நிலையில் கச்சார்வெளியினை சேர்ந்த அரியகுட்டி வள்ளிப்பிள்ளை பூலோகம் குடும்பத்தினர் அதனை ஆறு இலட்சம் ரூபாவுக்கு பெற்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு