சொந்த வீட்டுக்குள் நுழைவதுபோன்று சாவகாசமாக நுழைந்து 4 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை!

ஆசிரியர் - Editor I
சொந்த வீட்டுக்குள் நுழைவதுபோன்று சாவகாசமாக நுழைந்து 4 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை!

மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக தொடர்ச்சியாகத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பெரியகமம் பகுதியில் உள்ள நான்கு வீடுகளில் திருட்டுகள் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் திருட்டு இடம்பெற்ற வீட்டில் இருந்த சி.சி.ரி.வி. காணொளியை பார்வையிட்ட போது சந்தேகத்திற்கு இடமான ஒருவர் சொந்த வீட்டுக்குள் நுழைவது போன்று நுழைந்து வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருந்து நீர் எடுத்துப் பருகி விட்டு வீடு முழுவதும் தேடுதல் மேற்கொண்டு 

வீட்டில் இருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளார்.அதேநேரம் அவர், அருகில் இருந்த இன்னும் ஒரு வீட்டிலும் இவ்வாறு புகுந்து அவ் வீட்டில் இருந்த தாலி உட்பட பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடியுள்ளார்.

வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் வெளியே வந்து கதவை உடைத்த போது கதவில் பதிந்த கை அடையாளங்களை இல்லாது செய்யும் நோக்குடன் தண்ணீரால் துடைக்கும் சி.சி.ரி.வி. காட்சியும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு மன்னார் சாவற்கட்டு பகுதியில் நான்கு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு