கப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்! ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம், குடமுருட்டியில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
கப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்! ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம், குடமுருட்டியில் சம்பவம்...

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட பரந்தன் - பூநகரி வீதியில் நேற்று மதியம் (06) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் திசை நோக்கி பயணித்த கெப்ரக வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் குடமுருட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு