கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவு (முழுமையாக வளராத சிசுவின் உடல்) மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவு (முழுமையாக வளராத சிசுவின் உடல்) மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை..

கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் முழுமையாக வளராத கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

தனியார் நிறுவன வளாகத்தில் குறித்த செய்தியை காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு