தவெக தலைவர் விஜய் குறித்து பொலிஸாரின் அதிரடி குற்றச்சாட்டு!

ஆசிரியர் - Admin
தவெக தலைவர் விஜய் குறித்து பொலிஸாரின் அதிரடி குற்றச்சாட்டு!

பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியாவின் 18வது நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களில் வாக்கு பதிவு நடைபெற்றது.     

பல திரைப்பிரபலங்களும் தங்களது வாக்களிக்கு உரிமையை விட்டுக்கொடுக்காமல் உரிய இடத்திற்கு சென்று வாக்களித்து வந்தனர்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நண்பகல் அளவில் வாக்களிக்க சென்றுள்ளார்.

ரசிகர்களின் கூட்டம் அதிகரித்தால், நடிகர் விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வெற்றிகரமாக வாக்களித்தார்.

இந்நிலையில் விஜய் மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.

பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், 200இற்கும் மேற்பட்டவர்களுடன் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.

தேர்தல் விதிமுறையை மீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு