பயிர்ச்செய்கைக்காக நிலத்தை பண்படுத்தியபோது ஆயுதங்கள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
பயிர்ச்செய்கைக்காக நிலத்தை பண்படுத்தியபோது ஆயுதங்கள் மீட்பு!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் வெடிப்பொருட்கள் சில இன்று வெள்ளிக்கிழமை (05) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரியன் கட்டு கிராம சேவகர் பிரிவின் பெரிய தட்டுமுனையில் உள்ள விவசாய காணியொன்றிலே அவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இன்றைய தினம் காலை வழக்கம் போல் குறித்த காணியில் பயிர் செய்கை நடவடிக்கைக்காக நீர் குழாய் பொருத்தும் முகமாக குழியொன்றினை தரையில் வெட்டிய போது பொலித்தீன் பையில் மறைத்து வைக்கப்பட்டு சுற்றப்பட்ட நிலையில் மர்மப் பொருள் தென்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக உடனடியாக அருகில் உள்ள 233 ஆவது வாகரை இராணுவப் படைப் பிரிவிலுள்ள இராணுவ புலனாய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலமைகளை அவதானித்தன் பின்னர் கதிரவெளி விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் அவற்றினை மீட்டு வாகரை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது 81 மோட்டார் துப்பாக்கி அதற்கு பொருத்தும் பரல்-1,பை போட்-1,வேஸ் பிளேட்-1 ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இவை கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என தெரிவித்தனர். இதன்போது வாகரை 233 ஆவது படைப் பிரிவின் இராணுவ உயர் அதிகாரிகள்,பொலிஸார் ஆகியோர்கள் உடன் சமூகமளித்திருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு