மாவை, சிறிதரனுக்கு தெரியாமல் அனுரவுடன் சுமந்திரன் இரகசிய பேச்சா?

ஆசிரியர் - Editor IV
மாவை, சிறிதரனுக்கு தெரியாமல் அனுரவுடன் சுமந்திரன் இரகசிய பேச்சா?

தமிழரசுக் கட்சிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் இந்தவாரம் ஒரு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் இவ்வாறான சந்திப்பு இடம்பெறுவது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட சிவஞானம் சிறிதரனும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்தவாரம், இடம்பெறவுள்ளதாக கடந்தவாரம் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பில் உள்ளதாகவும், அவருடன் தாம் கலந்துரையாடல்களை நடத்தவில்லையெனவும் மாவை சேனாதிராஜாவும் சிவஞானம் சிறிதரனும் கூறியுள்ளனர்.

எனவே தேசிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடல்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் தமக்கு தெரியாது என அவர்கள் கூறியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு