Singer finance தனது புதிய கிளையை கல்முனை நகரில் இன்று திறந்துள்ளது

ஆசிரியர் - Editor III
Singer finance தனது புதிய கிளையை கல்முனை நகரில் இன்று திறந்துள்ளது

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான Singer  finance  தனது புதிய கிளையை  கல்முனை நகரில் இன்று(28) திறந்துள்ளது .இது நிறுவனத்தின் கிளை விஸ்தரிப்பின் மற்றொரு கட்டத்திற்குச் சென்றுள்ளது.குறித்த திறப்பு விழாவில் பல்துறை சார்ந்த அதிதிகள் வருகை தந்து நிறுவனத்தின் புதிய கிளையினை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.புதிதாக திறந்து வைக்கப்பட்ட Singer  finance  இன் கிளையானது  இல  110,112, பிரதான வீதி கல்முனை    பகுதியில்  அமைந்துள்ளது .

Singer  finance ஆனது   இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு  கிளைகள் நாடு பூராகவும் இயங்கி வருவதுடன் இன்று கல்முனையில் 52 ஆவது கிளையினை ஆரம்பித்துள்ளது.அதில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை , மட்டக்களப்பு கிளைகளுடன் கல்முனை கிளையானது 52 ஆவது கிளையாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் லீசிங், கடன்கள், நிலையான வைப்புக்கள், வணிகக் கடன்கள், வீட்டுக் கடன்கள், சேமிப்புக் கணக்குகள் ,தங்க கடன்கள்,சிறுவர் சேமிப்பு   போன்ற பல நிதி வசதிகள் இதன் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும்.எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மிகவும் எளிதாக இந்த இடத்திற்குச் செல்ல முடியும்.

இது தவிர இக்கிளை திறந்து வைக்கப்பட்ட பின்னர் தேசிய கீதம் இயற்றலுடன்   தொடர்ச்சியாக அதிதிகளின் மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது.Singer  finance  ஐப் பொறுத்த வரையில் எங்கள் நோக்கம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான நிதிச் சேவையை வழங்குவதாகும்.  இந்த புதிய கிளையின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த நிதி சேவை அனுபவத்தையும், மிக இலகுவாக அணுகக் கூடிய வசதிகள் தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளுடன் சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த புதிய கிளையை வாடிக்கையாளர்களுக்கு உகந்த சேவை மத்திய நிலையமாக மேம்படுத்துவதில் எங்களின் பணிவான மகிழ்ச்சி.உங்கள் வாழ்வின் இலட்சியத்துக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றத் தயாராக இருக்கின்றோம் ” என Singer  finance  இன்   பிரதம நிறைவேற்று அதிகாரி  கூறினார்.

பின்னர் அதிதிகளான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் துஷான் அமர சூரிய, பிரதம செயற்பாட்டு உத்தியோகத்தர் இமான் பெரேரா  ,  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்,  உட்பட இந்நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்து உறுப்பினர்கள், உட்பட விசேட அதிதிகள் வாடிக்கையாளர்கள் ஊடகவியலாளர்கள்  பலரும் கலந்துகொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு