மோட்டார் சைக்கிள் வீட்டு கதவுடன் மோதி விபத்து! வாசலில் காயத்துடன் கிடந்து மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு...

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிள் வீட்டு கதவுடன் மோதி விபத்து! வாசலில் காயத்துடன் கிடந்து மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு...

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்று தனது வீட்டு கதவுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 பளைப் பகுதியை 21 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். 

கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தலைக்கவசம் அணியாத நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளானதால் தான் தலையில் படுகாயம் ஏற்பட்டது என மரண விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு