ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும்-மார்ச்-12 இயக்கம்

ஆசிரியர் - Editor III
ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும்-மார்ச்-12 இயக்கம்

ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும்-மார்ச்-12 இயக்கம்

ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மார்ச் -12 இயக்கத்தின்   8 விடயங்களை பின்பற்றி செயற்பட மக்கள் முன்வர வேண்டும் என மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு தெரிவித்துள்ளது.

மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட குழுவின் விசேட செய்தியாளர் சந்திப்பு கல்முனை சேனைக்குடியிருப்பு பகுதியிலுள்ள அதன் அலுவலகத்தில் இன்று நடைபெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்  கந்தையா சத்தியநாதன் 

2015 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மார்ச் 12 அமைப்பின் செயற்பாட்டை மக்களுக்கு தெளிவூட்டுவதற்காகவே இச்செய்தியாளர் மாநாட்டை நடாத்துகின்றோம்.அதாவது உள்ளுராட்சி மாகாண சபை தேர்தல் பாராளுமன்ற தேர்தலில் எப்படியான அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு நாம் இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.மார்ச் 12 அமைப்பின் பாரிய நிகழ்ச்சி திட்டம் எதிர்வரும் மார்ச் 28 ஆந் திகதி கொழும்பில் நடைபெற இருக்கின்றது.அவ்வேளை மாவட்டங்கள் தோறும் இவ்வாறான செய்தியாளர் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து இதன் ஊடாக  மக்களுக்கு பல்வேறு தெளிவூட்டல்களை மேற்கொள்ள இருக்கின்றோம்.

இதில் 8 விடயங்களை இங்கு கருத்தில் கொள்ளவுள்ளோம்.அதாவது ஒரு அரசியல்வாதியை தெரிவு செய்ய வேண்டும் என்றால் 8 விடயங்களை பின்பற்றி செயற்பட மக்கள் முன்வர வேண்டும்.அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நாம் நடாத்தி அதன் ஊடாக பல்வேறு பெறுபேறுகளை பெற்றிருக்கின்றோம்.இதன் பிரகாரம் அவர்கள் எம்முடன் ஒரு இணக்கப்பாட்டு  ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கின்றார்கள்.அந்த வகையில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.ஊழல் இலஞ்சம் அற்ற ஒருவராக இருக்க வேண்டும்.நிதி நிலைமைகளை தெளிவாக அறிந்த ஒருவராக இருத்தல் வேண்டும்.

சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய ஒருவராக இருத்தல் வேண்டும்.இது போன்று பல செயற்பாடுகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.இவ்வாறான விடயங்களை அரசியல் கட்சிகளும் ஏற்றிருக்கின்றார்கள்.இங்கு மக்கள் அரசியல்வாதிகளுக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.இதை தான் மக்களிடம் நாம் எதிர்பார்க்கின்ற விடயங்களாகும்.இதற்கு ஒரு அட்டை திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம்.இவ்வட்டையில் மக்கள் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகளை எவ்வாறு கணிப்பீடு செய்வது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக ஒரு அரசியல்வாதியை எடுத்துக்கொண்டால் அவரது செயற்பாடு தொடர்பில் புள்ளிகளை அவ்வட்டையில் குறிப்பிட்டுள்ளோம்.இறுதியாக   எத்தனை புள்ளிகளை குறித்த அரசியல்வாதி பெற்றிருக்கின்றார் என்பதை மக்கள் தீர்மானிக்க முடியும்.இதற்கமைய இன்று இந்த அட்டை நாடு பூராகவும் மக்கள் மத்தியில் விநியோகிக் இருக்கின்றோம்.இதன் ஊடாக சிறந்த ஒரு அரசியல்வாதியையும் தூய்மையான அரசியலையும் நாம் உருவாக்க வேண்டும் என்பது தான் மார்ச் 12 அமைப்பின் பிரதான நோக்கமாகும் என குறிப்பிட்டார்.

மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட வி.ரி சகா தேவராஜா கருத்து

மார்ச்-12 இயக்கம் என்பது தூய்மையான அரசியலை நோக்கிய பயணிக்கின்ற ஒரு அமைப்பு.இலங்கையில் சம காலத்தில் இருக்கின்ற அரசியலானது துரதிஸ்டவசமாக சற்று வித்தியாசமாக சென்று கொண்டிருக்கின்றது.எனவே இதில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக இந்த மார்ச் 12 இயக்கமானது உருவாக்கப்பட்டிருக்கின்றது.அதாவது தகுதியானவர்கள் அரசியல்வாதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும்.தென்னாசிய நாடுகளில் துரதிஸ்டவசமாக இனத்துவ மதத்துவ அரசியல்கள் தலைவிரித்தாடுகின்றது.இவ்வாறானவற்றை நிறுத்த வேண்டும் என்பது தான் மார்ச்-12 இயக்கத்தின் நோக்கம் என்றார்.

 

மேலும்  குறித்த செய்தியாளர் சந்திப்பில் மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களான வி.ரி சகா தேவராஜா ,கே.சத்தியலிங்கம், எஸ்.தஸ்தகீர் ,எஸ்.நாகேந்திரன், ஏ.எல்.சுபைர், திருமதி என்.நந்தினி, ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு