திருமணமாகி ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த பிரியங்கா நல்காரி!!

ஆசிரியர் - Editor II
திருமணமாகி ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த பிரியங்கா நல்காரி!!

சன் ரி.வியின் ரோஜா சீரியல் மூலமாக பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. அத்தொடருக்கு பின் ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் அவர் நடித்தார். 

அந்த நேரத்தில் தான் அவர் காதலித்து வந்த ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் யாரும் இல்லாமல் மலேசியாவில் ரகசியமாக அந்த திருமணம் நடந்தது.

அதன் பின் சீதா ராமன் சீரியலில் இருந்து பிரியங்கா வெளியேறினார். அடிக்கடி மலேசியா சென்று வர முடியாததால் இந்த முடிவு என சொல்லப்பட்டது. அதற்கு பின் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் பிரியங்கா நல்காரி நளதமயந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

பிரியங்கா நல்காரி தற்போது இன்ஸ்டாபக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் ஸ்டில்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். மேலும் நீங்க சிங்கிளா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ஆமாம் என இன்ஸ்டாவில் பதில் அளித்திருக்கிறார் அவர்.

அதனால் ஒரே வருடத்தில் கணவரை அவர் பிரிந்துவிட்டாரா என தகவல் பரவி வருகிறது. இந்த பிரிவுக்கு என்ன காரணம் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு