31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

ஆசிரியர் - Editor I
31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை மாத்திரைகளுடன் ஏற்கனவே 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், 

செளத்பார் பகுதியில் போதை மாத்திரைகள் விற்க முற்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த இளைஞனிடன் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் 

செளத்பார் ரயில் நிலைய பகுதி அருகில் கைவிடப்பட்ட அட்டை பண்ணை கொட்டில் ஒன்றிலே சூட்சுமமான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 31 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு