இதுவரை 39 எலும்புக்கூடுகள் மீட்பு - வீதிக்குள் கீழ் பெருமளவு சடல எச்சங்கள் இருப்பதாக சந்தேகம்!

ஆசிரியர் - Admin
இதுவரை 39 எலும்புக்கூடுகள் மீட்பு - வீதிக்குள் கீழ் பெருமளவு சடல எச்சங்கள் இருப்பதாக சந்தேகம்!

கொக்குத்தொடுவார் வீதிக்குக் கீழ் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் எனவும், நீதிமன்றில் அது தொடர்பாக இன்று தீர்வு எட்டப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் எட்டாவது நாள் அகழ்வு நேற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

கொக்குத்தொடுவார் வீதிக்குக் கீழ் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் எனவும், நீதிமன்றில் அது தொடர்பாக இன்று தீர்வு எட்டப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் எட்டாவது நாள் அகழ்வு நேற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் இதுவரை 39 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது நான்கு அடி, பதின்நான்கு அடி நீள அகலமுள்ள குழியில் அகழ்வுப்பணி இடம்பெற்று வருகின்றது. இது தமிழீழ விடுதலை புலிகளின் உடலங்கள் என நம்பப்படுகிறது.

அத்தோடு கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனையில் வீதிக்கு மேற்கு பக்கமாக உள்ள வீதிக்குள் மனித எச்சங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது. அது தொடர்பாக நீதிமன்றில் இன்று ஒரு கலந்துரையாடல் இடம்பெற்று இது தொடர்பாக ஒரு தீர்மானம் எடுக்கப்படும்.

குறித்த அகழ்வுப் பணியானது இரண்டாம் கட்டமாக தொடர்ச்சியாக எட்டு வாரங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றுடன் இந்த முதலாம் கட்டம் நிறுத்தப்படலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகின்றது. இரண்டாம் கட்டத்துக்கான செலவுத்தொகை தீர்மானிக்கப்படும்.

அத்தோடு பெருமளவான மனித எச்சங்கள் அந்த பகுதிக்குள் இருக்கலாம் எனவும் அச்சம் காணப்படுகிறது. இந்த அகழ்வுப்பணி இன்றும் தொடர இருக்கின்றது. இதுவரை விடுதலை புலிகள் என சந்தேகிக்கும் 39 ஆண், பெண் மனித உடல் கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு