22 மில்லியன் மக்களுக்கு இழப்பீடு வழங்க ராஜபக்ஷவினரிடம் போதிய பணம் உள்ளது!

ஆசிரியர் - Admin
22 மில்லியன் மக்களுக்கு இழப்பீடு வழங்க ராஜபக்ஷவினரிடம் போதிய பணம் உள்ளது!

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால், இந்த நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கு இழப்பீடு வழங்க ராஜபக்ஷ சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே போதுமான பணத்தை வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் .     

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூறப்பட்டவர்களிடம் இருந்து மீட்கும் பணியை இப்போதே தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே வைத்திருக்கும் பணத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“நாட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள அனைத்து பணத்தையும் கொண்டு வர முடியும். அந்த பணத்தில் தான் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். அப்போதைய ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலரால் பொதுப் பணம் திருடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது, ”

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு வழங்கவும், திருடப்பட்ட பணத்தை திறைசேரியில் கொண்டு வரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும்.

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு கோருவதற்கு உரிமை உள்ளது என்றும், திருடப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வரவும், பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறச் செய்யவும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு