"லியோ" படம் பார்க்க சென்ற இரு குழுக்களுக்கிடையே வாள்வெட்டு மோதல்! 5 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I

மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை வாள்வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற குழுக்களுக்கிடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி அது வாள் வெட்டில் முடிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு