ருத்ர தாண்டவமாடிய ரொனால்டோ!! -கோல் மழை பொழிந்த போர்த்துக்கல்-

ஆசிரியர் - Editor II
ருத்ர தாண்டவமாடிய ரொனால்டோ!! -கோல் மழை பொழிந்த போர்த்துக்கல்-

யூரோ தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி 5-0 என போஸ்னியா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

UEFA யூரோ தகுதிச்சுற்று தொடரின் இன்று நடந்த போட்டியில் போர்த்துக்கல் மற்றும் போஸ்னியா ஹெர்ஸிகோவினா அணிகள் மோதின.

பிலினோ பொலிஜோ (Bilino Poljo) மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் போர்த்துக்கல் அணி அசுரவேக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 5 ஆவது நிமிடத்திலேயே கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ரொனால்டோ கோல் அடித்தார். 

அதனைத் தொடர்ந்து 20 ஆவது நிமிடத்தில் கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறிய ரொனால்டோவை தடுக்க கோல் கீப்பரே முன்னே வந்தார். ஆனாலும் அசராமல் ரொனால்டோ பந்து தூக்கிவிட்டு கோல் ஆக மாற்றினார்.

அதன் பின் புயல் வேகத்தில் ஏனைய போர்த்துக்கல் வீரர்களும் செயல்பட்டனர். 25 ஆவது நிமிடத்தில் புருனோ பெர்னாண்டஸும், 32 ஆவது நிமிடத்தில் கேன்செலாவும் கோல் அடித்தனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து போஸ்னியா அணி மீள்வதற்குள் 41 ஆவது நிமிடத்தில் ஜோஹோ பெலிக்ஸ் அதிரடியாக கோல் அடித்தார். 

இதனால் முதல் பாதியிலேயே போர்த்துக்கல் 5-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் போர்த்துக்கல் இமாலய வெற்றி பெற்றது.  

கடந்த போட்டியில் ஸ்லோவாகியா அணிக்கு எதிராக 2 கோல்கள் அடித்திருந்த ரொனால்டோ தற்போது மீண்டும் 2 கோல்கள் அடித்து மிரள வைத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு