இந்தியா – பாகிஸ்தான் போட்டியை பார்க்க வரும் ரஜினி, அமிதாப் பச்சன்!! -பாதுகாப்பு கடமையில் 11,000 பொலிஸார்-

ஆசிரியர் - Editor II
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை பார்க்க வரும் ரஜினி, அமிதாப் பச்சன்!! -பாதுகாப்பு கடமையில் 11,000 பொலிஸார்-

இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் காணவுள்ளதால் 11,000க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில்  ஈடுபடவுள்ளனர்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை சனிக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று முடிக்கப்பட்டுள்ளன. போட்டி அன்று அகமதாபாத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள். போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை தர உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. 7 ஆயிரம் பொலிஸார் மற்றும் 4 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் மைதானத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் டிரோன் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு