வீதிகளில் சிதறிக்கிடக்கும் சடலங்கள்!! -சிதைந்து போன இஸ்ரேல் எல்லை கிராமம்-

ஆசிரியர் - Editor II
வீதிகளில் சிதறிக்கிடக்கும் சடலங்கள்!! -சிதைந்து போன இஸ்ரேல் எல்லை கிராமம்-

காசா எல்லைக்கு அருகில் உள்ள இஸ்ரேல் கிராமமான க்பர் அஜா பண்ணைகளால் சூழ்ந்தது. ஒரு பாடசாலை, தேவாலயத்துடன் செழிப்பான இடமாக இருந்தது.

கடந்து சனிக்கிழமை இக்கிராமத்திற்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் குண்டுகளால் வீடுகளை தாக்கி, வீட்டில் இருந்த குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். 

இதனால் இந்த கிராமத்தில் எந்த வீட்டிற்குள் சென்றாலும் இறந்தவர்கள் உடல்களாக காட்சியளிக்கின்றன.

இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுத்ததில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். வுpதிகளில் இவர்களின் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன.

இதனால் செழிப்பாக இருந்த கிராமம், இந்த போரினால் பிணங்களாக குவிந்து காட்சியளிக்கின்றன. ஒரு பக்கம் இரத்தம் படிந்து சுவர்கள், வீடுகள். மறுபக்கம் அடையாளம் காணப்படுவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள உடல்கள் என காட்சியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு