5 ஆவது நாளாக தொடரும் போர்!! -காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்-

ஆசிரியர் - Editor II
5 ஆவது நாளாக தொடரும் போர்!! -காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்-

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று 4 ஆவது நாள் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் காயம் அடைந்துள்ளனர்.

காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 பேர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 130 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இன்று புதன்கிழமை 5 ஆவது நாளாகவும் அங்கு போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்மப்படுகின்றது.

மேலும் காசா மீது தரைவழி தாக்குதல்களை நடத்துவதற்கு இஸ்ரேல் படைகள் தயாராக வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காசா எல்லையில் இஸ்ரேல் 3 இலட்சம் வீரர்களை குவித்துள்ளது. மேலும், இராணுவ டாங்கிகள், ஆயுதங்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் காசா எல்லையில் குவித்துள்ளனர். இதன் மூலம் காசா முனை மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவது உறுதியாகியுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு