கிளிநொச்சி - கோணாவிலில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் இளம் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி - கோணாவிலில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் இளம் குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி - கோணாவில் பகுதியில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் சம்பவ இடத்தில் உள்ள நிலையில் கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவ இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு,

பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழு முரண்பாடு இச்சம்பவத்திற்கு வழியமைத்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு