காதல் விவகாரத்தினால் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல், இரு மாணவர்கள் வைத்தியசாலையில்! சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்...

ஆசிரியர் - Editor I
காதல் விவகாரத்தினால் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல், இரு மாணவர்கள் வைத்தியசாலையில்! சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்...

காதல் விவகாரத்தினால் இரு பாடசாலை மாணவர்களை தலைக்கவசம் மற்றும் கைகளால் தாக்கியதாகக்  கூறப்படும் நான்கு இளைஞர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவர் பாணந்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை (21) பாடசாலை முடிந்து தங்களது  வீடுகளுக்கு  நடந்து சென்று கொண்டிருந்தபோது சந்தேக நபர்கள் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு