மதுபானம் வாங்கிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பி ஓடிய பொலிஸ் அதிகாரி...

ஆசிரியர் - Editor I
மதுபானம் வாங்கிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பி ஓடிய பொலிஸ் அதிகாரி...

முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இரண்டு மதுபானசாலைகளுக்கு சென்று மதுபானத்தை பெற்று கொண்டுவிட்டு பணத்தை செலுத்தாது தப்பியோடும் காட்சிகள் சி.சி.ரி.வி. கெமராக்களில் பதிவாகியுள்ளது.

குறித்த சமபவம்  நேற்று வெள்ளிக்கிழமை (8) காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மதுபானசாலைக்கு சென்று அரை போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டு பணத்தை தருவதாக கூறிவிட்டு மதுபான போத்தல்களுடன் முச்சக்கரவண்டியில் குறித்த பொலிஸ் பரிசோதகர் தப்பி ஓடியுள்ளார்.

இதேபோன்று மற்றுமொறு மதுபானசாலைக்கு சென்ற குறித்த பொலிஸ் பரிசோதகர் அங்கும் அரைப்போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டு பணத்தை எடுத்து வருவதாக தெரிவித்து மதுபானத்துடன் முச்சக்கரவண்டியில்  தப்பியோடியுள்ளார். 

இந்தக் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமெராக்களில் பதிவாகியுள்ள நிலையில், அவை சமூக ஊடகங்களில் வைராலகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு