7 முறை கட்டாய கருக்கலைப்பு!? -சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை-

ஆசிரியர் - Editor II
7 முறை கட்டாய கருக்கலைப்பு!? -சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை-

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி மற்றும் கட்டாய கருக்கலைப்பு முறைப்பாடு தெரிவித்த நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை வைத்தியசாலையில் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் சீமான் மீது 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முறைப்பாடு தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை பொலிஸ் அலுவலகத்தில் மீண்டும் ஒரு முறைப்பாடு செய்தார்.

அதில், 2008 இல் சீமான் மதுரையில் தம்மை திருமணம் செய்து கொண்டார். 2011 இல் பணம் ,நகைகளை பறித்துக் கொண்டு மோசடி செய்துவிட்டார். அத்துடன் தன்னை 7 முறை சீமான் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்பது உள்ளிட்ட ஏராளமான புகார்களை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார். 


சென்னை பொலிஸார், விஜயலட்சுமியை வரவழைத்து சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். சீமான் மீது தெரிவித்த முறைப்பாடுகளுக்கான ஆதாரங்களையும் பொலிஸார் விஜயலட்சுமியிடம் பெற்றனர்.

பின் திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. அப்போது, சீமான் கைது செய்யப்படலாம் என தகவலும் பரவியது. 

இந்த முறப்பாடுகளை சீமான் திட்டவட்டமாக மறுத்திருந்தார். அரசியல் காரணங்களுக்காக தம்மை தேர்தல் பணியில் இருந்து திசை திருப்புவதற்க்காக இந்த முறைப்பாடுகலை தெரிவிக்கப்படுவதாகவும் சீமான் விளக்கமளித்தார். மேலும் தமக்கு எந்த ஒரு சம்மனும் வரவில்லை என சீமான் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமியை இன்று வியாழக்கிழமை மீண்டும் அழைத்து சென்னை கீழ்ப்பாக்கம் வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு