ஆசிய கிண்ண போட்டியில் ஹசரங்கா உள்பட முக்கிய வீரர்கள் ஆடுவது சந்தேகம்

ஆசிரியர் - Editor II
ஆசிய கிண்ண போட்டியில் ஹசரங்கா உள்பட முக்கிய வீரர்கள் ஆடுவது சந்தேகம்

ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணியின் ஹசரங்கா உள்பட முக்கிய வீரர்கள் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது,

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவதில் சந்தேகமாகியுள்ளது.

அண்மையில் எல்.பி.எல் தொடரின் போது பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார். இதனால் அவர் ஆசிய போட்டியில் குறைந்தது முதல் 2 ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது.

இதே போல் தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் சமீரா ஆசிய போட்டியை முழுமையாக தவறவிட வாய்ப்புள்ளது. துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

அவர்கள் வேகமாக குணமடைவதை பொறுத்து அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரிய வரும். இது இலங்கைக்கு நிச்சயம் பின்னடைவு தான். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 31 ஆம் திகதி வியாழக்கிழமை வங்காளதேசத்தை பல்லகெலேவில் சந்திக்கிறமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு