வாலிப கிண்ண உதைபந்தாட்டம்!! -கோல் மழை பொழிந்த நாவாந்துறை சென் மேரிஸ்-

ஆசிரியர் - Editor II
வாலிப கிண்ண உதைபந்தாட்டம்!! -கோல் மழை பொழிந்த நாவாந்துறை சென் மேரிஸ்-

இளவாலை வருத்தபடாத வாலிப சங்கம் தனது 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தும் அணிக்கு 9 பேர் உள்ளடக்கிய 'வாலிப கிண்ணம்' மாபெரும் உதைபந்தாட்ட போட்டி சனிக்கிழமை இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இப்போட்டியில் நாவாந்துறை சென் மேரிஸ் அணியை எதிர்த்து அராலி பாரதி அணி மோதியது.  ஆரம்பத்தில் இருந்து போட்டியை தனது கட்டுபாட்டில் வைத்திருந்த சென்மேரிஸ் அணியினர் அவ் அணியின் நிதர்சன், யூட் கோலாட்டம் ஆட ஆட்ட நேர முடிவில் 8:0 என்ற கோலடிப்படையில் நாவாந்துறை சென் மேரிஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

நாவாந்துறை சென் மேரிஸ் அணி சார்பில் நிதர்சன் 3, யூட் 2, யொனிஸ்ரன், தங்கன், நியூராஜ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களை அடித்திருந்தனர். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக நாவாந்துறை சென் மேரிஸ் வீரர் யூட் தெரிவானார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு