டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் மரணம்...

ஆசிரியர் - Editor I
டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் மரணம்...

புதுக்குடியிருப்பு - விசுவமடு பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவ்விபத்து தொடர்பில் கைதான டிப்பர் வாகனத்தின் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.  

கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து நேர்ந்தது. 

இதில் காயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பரந்தன், உமையாள்புரம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் நகுலேஸ்வரன் என்கிற 47 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார்.  

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.  

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு