மதநிந்தனை குற்றச்சாட்டு!! -4 தேவலாயங்கள் தீக்கிரை-

ஆசிரியர் - Editor II
மதநிந்தனை குற்றச்சாட்டு!! -4 தேவலாயங்கள் தீக்கிரை-

பாகிஸ்தானில் மதநிந்தனையில் ஈடுபட்டார்கள் என குற்றம்சாட்டி ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் ஒன்றிணைந்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் கிறிஸ்தவர்களின் வீடுகளையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.

அந்நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களை நடத்தினர். தேவாலயங்களை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பஞ்சாப் மாகாண உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாக ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு