வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க இராணுவ வீரர்!! -வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்-

ஆசிரியர் - Editor II
வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க இராணுவ வீரர்!! -வெளியாகியுள்ள பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்-

அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் வட கொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்தபோது கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைக் குறித்து அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள 250 கிலோமீற்றர் இடைவெளி, கூட்டு பாதுகாப்பு பகுதி (Joint Security Area) என்று அழைக்கப்படுகிறது. 

இந்த பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா செல்ல அனுமதி உள்ளது. அந்த இடத்திலிருந்து இரு கொரியாக்களின் வீரர்களும் தங்கள் எல்லைகளை பாதுகாத்து நிற்பதைக் காணமுடியும்.

இந்நிலையில், அந்த பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த அமெரிக்க இராணுவ வீரரான ட்ராவிஸ் கிங் (Travis King, வயது 23) என்பவர், அனுமதிக்கப்பட்ட பகுதியைத் தாண்டி வட கொரிய எல்லைக்குள் நுழைந்துள்ளார்.

அவரைக் கைது செய்து காவலில் அடைத்துள்ளனர் வட கொரிய அதிகாரிகள்.

இந்நிலையில், ட்ராவிஸ் அமெரிக்க இராணுவத்தில் மோசமாக நடத்தப்பட்டதாலும், இனரீதியாக பாரபட்சம் காட்டப்பட்டதாலுமே, வேண்டுமென்றே வடகொரியாவுக்குள் அவர் நுழைந்துள்ளதாக வடகொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், வட கொரியா அல்லது ஒரு மூன்றாவது நாட்டில் அவர் புகலிடம் கோர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வட கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ட்ராவிஸின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு எரிச்சலை யூட்டியுள்ள நிலையில், அவருக்கு தண்டனையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஊதியம் பிடித்துவைக்கப்படுவதுடன், அவமானப்படுத்தப்பட்டு அவர் இராணுவத்திலிருந்து வெளியேற்றப்படலாம்.

கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக வட கொரியாவால் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர் ட்ராவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு