வடக்கின் சாம்பியன் ஆனது தெல்லிப்பழை மகாஜனா

ஆசிரியர் - Editor II
வடக்கின் சாம்பியன் ஆனது தெல்லிப்பழை மகாஜனா

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் 20 வயதுப் பெண்கள் அணியும் 17 வயதுப் பெண்கள் அணியும் சாம்பியனாகியுள்ளன.

20 வயதுப் பெண்கள் அணி புங்குடுதீவு மகா வித்தியாலய அணியை 2:0 என்ற கோல் கணக்கிலும், 17 வயதுப் பெண்கள் அணி அருணோதயக் கல்லூரியை சமநிலை தவிர்ப்பு உதையில் 3:2 என்ற கோல்கணக்கிலும் வென்று மாகாண சாம்பியனாகியுள்ளன.

20 வயதுப் பெண்கள் அணி தொடர்ந்து 8 ஆவது முறையாகவும்,

17 வயதுப் பெண்கள் அணி தொடர்ந்து 2 ஆவது முறையாகவும் சாம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு