வவுனியா இரட்டைக்கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைது...

ஆசிரியர் - Editor I
வவுனியா இரட்டைக்கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைது...

வவுனியா - தோணிக்கல் பகுதியல் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் வீட்டுக்கு தீ வைத்து இருவரை கொலை செய்ததுடன், 8 பேரை படுகாயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்படைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கடந்த 23ம் திகதி நள்ளிரவு வீட்டுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியது இந்த சம்பவத்தில் 21 வயதான பெண் ஒருவரும், 35 வயதான ஆண் ஒருவரும் உயிரிந்ததுடன் சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் நேற்றைய தினம் 5 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு