வவுனியாவை சேர்ந்த மேலும் 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்...

ஆசிரியர் - Editor I
வவுனியாவை சேர்ந்த மேலும் 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்...

இலங்கையை சேர்ந்த மேலும் 4 பேர் தமிழகம் - தனுஷ்கோடி - அரிச்சல்முனையில் இன்று காலை தஞ்சமடைந்துள்ளனர். 

இந்திய கடலோர பாதுகாப்பு பொலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் எனவும், இவர்கள் வவுனியாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு