"சரத் வீரசேகரவிடம் கூறி உன்னை தூக்குவேன்" யாழ்ப்பாண இளைஞனை தொலைபேசியில் அச்சுறுத்திய ஆசாமி...

ஆசிரியர் - Editor I

உன்னை பற்றி தவறாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிடம் கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவில் இருந்து யாழ்.இளைஞன் ஒருவருக்கு தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

136, பசார் வீதி , வவுனியா எனும் முகவரியை சேர்ந்த தேவராசா கோபாலகிருஷ்ணன் என்பவராவால் தனக்கு கொலை அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் 

நேற்று  செவ்வாய்க்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு இலக்கம் 2023/07/22 ம் திகதி CIB 2 212/296 எனும் இலக்கத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து முறைப்பாட்டாளர் கூறுகையில், 

யாழ்ப்பாணத்திலுள்ள குறித்த நபரின் உறவினருக்கு ரூபாய் 2 இலட்சம் ரூபாய் கடனாக கொடுத்த நிலையில் அதனை தருமாறு பலமுறை கேட்டும் வழங்காத நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.

மேற்படி புகார் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் சம்மந்தப்பட்டவர்களுக்கு விசாரணைகள் மேற்கொள்ள அழைப்பு விடுத்த பின்னர் 

வவுனியா நபர்  தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் தனக்கு தற்போதய நாடாளுமன்ற  சரத் வீரசேகரவுடன் தொடர்பு உள்ளதாகவும் தான் அவருக்கு என்னை பற்றி தவறாக கடிதம் ஒன்றை அனுப்பி என்னை இல்லாமல் செய்து விடுவதாகவும் தெரிவித்தார் .

மேலும் தனக்கு பல அடியாட்கள் குழு இருப்பதாகவும் அவர்களை கொண்டு வந்து என்னை கொலைசெய்து விடுவேன் என்றும் தனித்தனியாக சண்டை செய்ய வா எனக்கூறியும் எனது சகோதரி மற்றும் தாயார் மற்றும் என்னை அசிங்கமான முறையில் ஏசி உள்ளார்.

நான் எனது தந்தையை இழந்த நிலையில் கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு எனது குடும்பத்தையும் பாதுகாத்து வருகிறேன்.

ஆகையால் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில் எனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு