முடிந்தது லியோ படப்பிடிப்பு!! -ஓய்வுக்காக வெளிநாடு புறப்பட்டார் தளபதி-

ஆசிரியர் - Editor II
முடிந்தது லியோ படப்பிடிப்பு!! -ஓய்வுக்காக வெளிநாடு புறப்பட்டார் தளபதி-

லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள  நிலையில், தளபதி விஜய் ஓய்வுக்காக வெளிநாடு புறப்பட்டுச் சென்றுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ‘லியோ’ படத்தின் தொடர் படப்பிடிப்புகளுக்குப் பின் தளபதி விஜய் ஓய்வுக்காக வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

அவர் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு