யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற லொறி புகைரதத்துடன் மோதி விபத்து! இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற லொறி புகைரதத்துடன் மோதி விபத்து! இருவர் படுகாயம்..

வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) புகைரதம் மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதில்  லொறி சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி புகையிரதம்,  வவுனியா - திருநாவற்குளம் 3ஆம் ஒழுங்கை பகுதியில் வைத்து, புகையிரத கடவையை கடக்க முயன்ற லொறி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லொறியில் பயணித்த சாரதியும் மற்றொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

அதனையடுத்து, காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு, வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இவ்விபத்தில் தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த இருவரே காயமடைந்துள்ளனர் என பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு