பளை - இத்தாவில் பகுதியில் கோர விபத்து!! ஒருவர் பலி..

ஆசிரியர் - Editor I
பளை - இத்தாவில் பகுதியில் கோர விபத்து!! ஒருவர் பலி..

பளை - இத்தாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வேன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்தில் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 39 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு