குருந்தூர் மலை பொங்கல் விழாவில் பொலிஸார், அதிரடிப்படையினர், இனவாதிகள் அட்டகாசம்! கற்பூர தீபத்தை சப்பாத்து கால்களால் மிதித்து பொலிஸார் அடாவடி..

ஆசிரியர் - Editor I
குருந்தூர் மலை பொங்கல் விழாவில் பொலிஸார், அதிரடிப்படையினர், இனவாதிகள் அட்டகாசம்! கற்பூர தீபத்தை சப்பாத்து கால்களால் மிதித்து பொலிஸார் அடாவடி..

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு நடத்த சென்றிருந்த பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளை பொலிஸார், அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தியதுடன் பொங்கல் விழாவிற்கு வந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கற்பூரத்தை சப்பாத்து காலால் அனைத்து அராஜகம் புரிந்துள்ளனர்.

குருந்தூர் மலை ஆக்கிரமிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடன் அங்கு விகாரை ஒன்றும் நீதிமன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இன்றைய தினம் தமிழர்களால் குருந்தூர் மலையில் உள்ள ஆதி சிவன் பொங்கல் விழா ஒன்றினை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக இன்று காலை அரசியல்வாதிகள், பொதுமக்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடி பொங்கல் விழாவிற்கான ஒழுங்குகளை செய்து கொண்டிருந்தபோது பெருமளவு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன்,


ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட குருத்தி விகாரையின் விகாரதிபதி இனவாதம் பேசி அழைத்திருந்த சிங்கள மக்களும் அங்கு கூடி பொங்கல் விழாவுக்கு சென்று இருந்த தமிழ் மக்களை தடுத்து நிறுத்தியதுடன் இறுதிவரை பொங்கல் விழாவை நடாத்த விடாமல் தடுத்து மலையிலிருந்து அனைவரையும் கீழே இறக்கியுள்ளனர்.

முன்னதாக உங்கள் விழாவுக்காக கற்பூரம் ஏற்றப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சப்பாத்து கால்களுடன் நுழைந்து கற்பூர தீபத்தை காலால் அனைத்து உள்ளார் மேலும் பொங்கல் விழாவிற்காக கூடியிருந்தவர்களில் ஒருவரை பொலிஸார் தாக்கியும் உள்ளனர்.

நிலையில் கடும் அராஜகம் காரணமாக குருந்தூர் மலை ஆதி சிவனுக்கு இன்று நடைபெற இருந்த பொங்கல் விழா திட்டமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் விழாவில் பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான  தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராஜா கஜேந்திரன்,

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பா.கஜதீபன், எஸ்.பவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞானப்பிரகாசம் கிஷோர் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டு இருந்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு