தறிகெட்டு ஓடிய கப் வாகனம், வீதி ஓரமாக நடந்து சென்ற சிறுவன் மீது மோதி கோர விபத்து! சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி...

ஆசிரியர் - Editor I
தறிகெட்டு ஓடிய கப் வாகனம், வீதி ஓரமாக நடந்து சென்ற சிறுவன் மீது மோதி கோர விபத்து! சிறுவன் சம்பவ இடத்திலேயே பலி...

பளை - முல்லையடி பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற வாக ன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓர மாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ்.நோக்கி வேகமா க பயணித்த கப் ரக வாகனம் ஒன்று மோதித்தள்ளியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் பளை முல்லையடியைச் சேர்ந்த ராஐபாஸ்கரன் ஐதுர்சிகன் என அடையாளம் காணப் பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய கெப் ரக வாகனம் தப்பி சென்றுள்ள தாக பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு