யாழ்ப்பாணத்தில் 3 வீடுகள் உடைத்துக் கொள்ளை! 3 பேர் கைது, கொள்ளையடித்த பொருட்களும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் 3 வீடுகள் உடைத்துக் கொள்ளை! 3 பேர் கைது, கொள்ளையடித்த பொருட்களும் மீட்பு..

மூன்று வீடுகளை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது உடமையில் இருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பொருட்களும் மீட்க்கப்பட்டுள்ளது.

யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகள் உடைக்கப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டுள்ளன என உரிமையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், திருட்டு குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

திருடப்பட்ட பொருட்களை வேறு இருவரிடம் ஒப்படைத்துள்ளதாக, விசாரணைகளில் சந்தேக நபர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், 

இருவரை கைது செய்த பொலிஸார் அவர்களின் உடமையில் இருந்து, வீடுகளில் திருடப்பட்ட மின்மோட்டர், கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் மீட்கப்பட்டன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை (4) யாழ்.நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து மூவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு