போதையில் ரகளை செய்த கணவன்!! -மகன்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி-

ஆசிரியர் - Editor II
போதையில் ரகளை செய்த கணவன்!! -மகன்களுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி-

தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து ரகளை செய்த கணவனை மகன்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் என்பவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி போதுமணி. இத்தம்பதிக்கு சூர்யா, சுகன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.

பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். அன்று இரவு வழக்கம்போல பாலமுருகன் வீட்டில் ரகளை செய்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மகன்கள் மற்றும் மனைவி சேர்ந்து பாலமுருகனின் கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். 

அயலவர்களிடம் பாலமுருகன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அயலவர்களுக்கு பாலமுருகனின் தற்கொலையில் சந்தேகம் வரவே, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மனைவி மற்றும் மகன்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கணவனை மகன்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக மனைவி ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு