லண்டனை உலுக்கிய இரட்டை கொலை!! -இருவரை அதிரடியாக கைது செய்த பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
லண்டனை உலுக்கிய இரட்டை கொலை!! -இருவரை அதிரடியாக கைது செய்த பொலிஸ்-

பிரித்தானியாவின் வடக்கு லண்டன் பகுதியில் நடந்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு லண்டனின் இஸ்லிங்டன் பகுதியில் 15 வயது சிறுவன் மற்றும் 23 வயது இளைஞர் என இரண்டு பேர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் இஸ்லிங்டன் உள்ள எல்தோர்ன் வீதியில் படுகாயங்களுடன் 15 வயது சிறுவன் லியோனார்டோ ரீட் கண்டெடுக்கபட்டான், ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் அதே நாள் இரவு 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் பார்க்கப்பட்ட நிலையில், அவரும் வெஸ்ட் லண்டன் வைத்தியசாலையில் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.

இந்த இரட்டை கொலை சம்பவத்தில் முதலில், 46 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்து இருந்தனர், ஆனால் விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிக மக்கள் கூட்டம் இருந்ததாக நம்பப்படுகிறது, எனவே வன்முறை சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இந்நிலையில் 15 வயது சிறுவன் லியோனார்டோ ரீட் மற்றும் 23 வயது இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 27 மற்றும் 17 வயதுடைய 2 பேர் கொலை மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றின் கீழ் திங்கட்கிழமை மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்போது வடக்கு லண்டன் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு