கொரோனா சீனாவின் உயிரியல் ஆயுதம்!! -அம்பலப்படுத்திய வுஹான் ஆராய்ச்சியாளர்-

ஆசிரியர் - Editor II
கொரோனா சீனாவின் உயிரியல் ஆயுதம்!! -அம்பலப்படுத்திய வுஹான் ஆராய்ச்சியாளர்-

சீனா அரசாங்கம் திட்டமிட்டே கொரோனா வைரஸை உயிரியல் ஆயுதமாக வடிவமைத்து, அதனை பரப்பியது என்று வுஹானில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.

அதிரவைக்கும் அந்த தகவலை வுஹான் ஆராய்ச்சியாளர் சாவோ ஷான் சர்வதேச செய்தி ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார். சாவோ ஷான் மற்றும் அவரது சகாக்களுக்கு, மனிதர்கள் உட்பட உயிரினங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் மிகவும் பயனுள்ள மாதிரி ஒன்றை அடையாளம் காண வுஹான் நிர்வாகம் பணித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஆபத்தான நான்கு கிருமிகளை அடையாளம் கண்டு, அதை தமது உயர் அதிகாரிகளுக்கு 2019 இல் ஒப்படைத்ததாகவும் சாவோ ஷான் குறிப்பிட்டுள்ளார். அந்த கிருமிகளை மனிதரிடத்திலும், வெளவால்கள் மற்றும் குரங்குகளிடத்திலும் சோதனை செய்துள்ளதாக சாவோ ஷான் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் என்பது உண்மையில் வேண்டுமென்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள உயிரியல் ஆயுதம் என குறிப்பிட்டுள்ள சாவோ ஷான், 2019 இல் வுஹான் நகரில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் போது தமது சகாக்கள் பலர் மாயமானதாகவும், அதில் ஒருவர் பின்னர் தெரிவிக்கையில்:-

சர்வதேச வீரர்கள் தங்கியிருந்த ஹொட்டல்களில் தங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அந்த ஹொட்டல்களில் ஆரோக்கியம் அல்லது சுகாதார நிலைமைகளை சரிபார்க்க சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

உண்மையில், உயிரியல் ஆய்வாளர்களை அப்படியான ஒரு ஆய்வுக்கு ஒருபோதும் அனுப்ப மாட்டார்கள் எனவும், அந்த ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் பரப்பும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சாவோ ஷான் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

ஆனால், உலகமெங்கும் சுமார் ஏழு மில்லியன் மக்கள் சாவுக்கு காரணமாக கொரோனா வைரஸ் தொடர்பில் இதுவரை உறுதியான பின்னணித் தகவல் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு