கிளிநொச்சியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு! ஒருவர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு! ஒருவர் படுகாயம்...

கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் இன்று (28) அதிகாலை காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காரின் சாரதியான 38 வயதுடைய நபர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபருடன் மேலும் இருவர் கனகபுரம் பகுதிக்கு காரில் சென்றிருந்தபோது வேறு ஒரு தரப்பினருடன் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து 

மோட்டார் சைக்களில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு