சினிமாவில் 30 வருடங்கள்!! -நினைவை பகிர இசை நிகழ்ச்சி நடத்துகிறார் ஏ.ஆர்-

ஆசிரியர் - Editor II
சினிமாவில் 30 வருடங்கள்!! -நினைவை பகிர இசை நிகழ்ச்சி நடத்துகிறார் ஏ.ஆர்-

ஓஸ்கார் நாயகன், பிரபல இசை அமைப்பாளர், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 

இப் படம் 1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானது. முதல் படத்திலேயே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த இவரது இசைப் பயணம், அடுத்து ஜென்டில்மேன், கிழக்குச் சீமையிலே, காதலன், பம்பாய் என ஆரம்பித்து ‘மாமன்னன்’ வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம் தெலுங்கு, ஆங்கில படங்களுக்கும் இசை அமைத்துள்ள ரஹ்மான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக 2 ஓஸ்கர் விருதையும் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடி தந்தவர்.

கோல்டன் குளோப், பாப்டா , தேசியத் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ள அவர், சினிமாவுக்கு வந்து 30 வருடம் ஆகிறது.

இதைக் கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி திரை பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு