சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டிலை வென்றார் அருணா

ஆசிரியர் - Editor II
சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டிலை வென்றார் அருணா

இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பெரியளவிலான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று 9 ஆவது சீசன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

சூப்பர் சிங்கர் 9 சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 

இறுதிப்போட்டியில் அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், சீசன் 9 வின்னர் டைட்டிலை அருணா தட்டிச் சென்றார். அவருக்கு 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது. பிரியா ஜெர்சன் இரண்டாவது இடமும், பிரசன்னா 3 ஆவது இடம் பிடித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு