அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக்- வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது அரியாலை கில்லாடிகள் 100 அணி-

ஆசிரியர் - Editor II
அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக்- வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது அரியாலை கில்லாடிகள் 100 அணி-

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தினால் நடத்தப்பட்ட மூன்றவது "அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் - 2023" மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை அரியாலை கில்லாடிகள் 100 அணி தனதாக்கியது.

ஆறு அணிகள் பங்குபற்றிய இச் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

அரியாலை சரஸ்வதி விளையாட்டு மைதானத்தில் நடந்த இவ்விறுதிப் போட்டியில் அரியாலை லயன்ஸ் அணியும், அரியாலை கில்லாடிகள் 100 அணியும் பலபரீட்சை நடத்தின.

முதலில் துடுப்பெடுத்தாடிய அரியாலை லயன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 74 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

75 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் 100 அணியினர் 9.2 பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் ஒரு இலக்கினை மட்டும் இழந்து 75 ஓட்டங்களை பெற்று 9 இலக்குகளால் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக 34 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து அணியின் வெற்றிக்கு வழிசமைத்த நி.கவிந்தன் தெரிவானார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு