விளையாடிக் கொண்டிருந்தபோது இரும்பு கேற் சிறுவன் மீது விழுந்ததில் சிறுவன் பலி!

ஆசிரியர் - Editor I
விளையாடிக் கொண்டிருந்தபோது இரும்பு கேற் சிறுவன் மீது விழுந்ததில் சிறுவன் பலி!

முல்லைத்தீவு - கேப்பாபுலவு பகுதியில் இரும்பு கேற் ஒன்று சிறுவன் மீது வீழ்ந்ததில் குறித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளது.

கேப்பாபுலவு பகுதியைச் சேர்ந்த மூன்று வயதான ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவன் வீட்டு கேற்றில் விளையாடிக்கொண்டிருந்தவேளை  குறித்த இரும்பு கேற் சிறுவன் மீது வீழ்ந்ததில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு